மாத்தறையில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான தெஹி பாலே மல்லி என்பவரின் சகோதரர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட காவல்துறை விசாரணைகளின் அடிப்படையில், மாத்தறை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1.21 கிலோகிராம் ஹெரோயின், ஒரு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி, 51 T-56 தோட்டாக்கள் மற்றும் 47 (9mm) தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் செயற்படும் பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுத வலையமைப்பு தொடர்பில், மாத்தறை காவல்துறையினரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.