சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் அதிரடியாக கைது
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெரெல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பகல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தெரெல மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 47 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.