தமிழக பாதீடு அறிக்கை;புயலைக் கிளப்பிய விவாதம்!
முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக அரசின் பாதீடு அறிக்கை தாக்கலின்போது நிதி அமைச்சர் ஜெபமாலையுடன் வந்தது அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரசியல் விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கையை அரசியல் சர்ச்சையாக மாற்றக் கூடாது என்ற கருத்தையும் முன்வைத்தார்.
இதனையடுத்து, அரசியல் விமர்சகர் மருத்துவர் ஷர்மிளா சமூக வலைத்தளத்தில் பதிலளித்து, "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இராமர் சிலையுடன் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ வந்தாலும் இதையே சொல்வீர்களா சேர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புகளிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.