நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற இந்த பரிகாராத்தை செய்து பாருங்கள்
ஒரு விஷயத்தை புதியதாக தொடங்குவதற்கு முன்பு மனதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.முக்கியமான வேலையை செய்ய தொடங்க போகின்றோம் நிச்சயமாக இதில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்ப வேண்டும்.
முதலில் ஒரு வேலையை செய்வதற்கு முன்பு அந்த வேலை நமக்கு உகந்தது என்று முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
அதன் பின்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முழு நம்பிக்கையுடன் நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செய்வதாக இருந்தாலும் சரி இந்த பரிகாரத்தை செய்யலாம்.
ஒரு நல்ல காரியத்தை செய்யும் முன் அது உங்களுக்கு சாதகமாக நடக்க வேண்டும். நல்லபடியாக நடக்க வேண்டும் என்று நினைத்து இதை செய்ய வேண்டும்.
காரிய வெற்றி பெற விநாயகர் வழிபாடு
வெற்றி என்றாலே அது விநாயகர் தான். தடைகளை தகர்க்க வழிபட வேண்டிய தெய்வம் என்றால் அது விநாயகர்.
வீட்டிலிருந்து செல்வதற்கு ஒரு நிமிடம் முன் இந்த வழிபாடு செய்ய வேண்டும். பூஜையறைக்கு சென்று விநாயகரை மனதார நினைத்துக் கொண்டு குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செல்லும் போது காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து உங்களை நீங்களே ஒரு முறை சுற்றி, நமஸ்காரம் செய்து வீட்டில் இருந்து உடனடியாக வெளியே கிளம்பி விடுங்கள்.
எவ்வாறு வழிபட வேண்டும்
பிள்ளையாருக்கு ஒரு சிவப்பு நிற பூவை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். பிள்ளையாருக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மூன்று தோப்புக்கரணம், மூன்று பிள்ளையார் கொட்டு, பிள்ளையாரை ஒரே ஒரு முறை வலம் வந்து, அந்த கோவிலில் ஒரு நிமிடம் அமர்ந்தால் போதும்.
கோயில் பிரகாரத்தில் மனதார பிரார்த்தனை செய்து உங்களுடைய வேலைக்கு நீங்கள் செல்லலாம். போகும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.
பலமுறை தவறவிட்ட ஒரு வேலையை ஒரு முறை பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டு முறைகளை செய்துவிட்டு உங்களுடைய முயற்சிகளையும் மேற்கொண்டு பாருங்கள்.
10 முறை முயற்சி செய்தும் கிடைக்காத ஒன்று 11 வது முறை பிள்ளையாரை வணங்கி விட்டு சென்றால் நிச்சயம் கிடைக்கும்.
அதுதான் விநாயகருக்கு இருக்கும் பலம். முழு நம்பிக்கையோடு இதை செய்தால் விநாயகர் உங்களுடனே துணைக்கு நிற்பார் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.