மோட்டார் சைக்கிளிற்கு வழிவிட்ட லொறிக்கு நேர்ந்த விபரீதம்
மோட்டார் சைக்கிளொன்றுக்கு வழியை விடுவதற்காக ஒதுங்கிய லொறியொன்று ஆற்றில் விழுந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று (22) கொட்டகலையில் பதிவாகியுள்ளது.
சம்பவம்
இதன்போது லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என திம்புளபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை யதன்சைட் தோட்டத்துக்கு நேற்று (22) மாலை 4 மணியளவில் செல்லும் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யதன்சைட் தோட்டத்திலிருந்து கொட்டகலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்த லொறியானது எதிர்திசையில் வந்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு பாலத்தின் மத்தியில் இடமளிக்க முற்பட்ட போது பாலத்தின் கீழே 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
லொறியில் மேழும் இருவர் பயணித்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.