பொன்னியின் செல்வன் நடிகை த்ரிஷாவுக்கு இத்தனை கோடி சம்பளமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்
வரலாற்று படமான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை த்ரிஷா பெற்றிருக்கும் சம்பளம் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இம்மாதம் ஏப்ரல் 28ஆம் திகதி வெளியாகவிருக்கிறது.
தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன.
இந்த நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடிப்பதற்காக 3 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இது முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் சேர்த்தா இல்லை இரண்டாம் பாகத்துக்கு மட்டுமா என்பது தொடர்பிலான தகவல் உறுதியாக வெளியாகவில்லை,
இருப்பினும், முதல் பாகத்தில் அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும் இரண்டாம் பாகத்தில் அவரை மையப்படுத்தி அதிக காட்சிகள் வரவிருப்பதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.