திருக்கோணமலையின் பழமையான ஆலயம் ஒன்றில் நடந்த கும்பாபிஷேகம்!
Sri lanka
Trincomalee
Temple
Spiritual
Kumbhabhishekham
By Shankar
திருக்கோணமலையில், நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஆலயங்களில் ஒன்றான பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி ஆலய இராஜகோபுரம் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தேறியது.
நேற்றைய தினம் (27-01-2022) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளுடன் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

இதன்போது பாரிய அளவிலான மக்கள் பங்கு கொண்டதுடன், பக்தியுடன் இறையருள் வேண்டி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
எழுத்துமூல ஆவணங்களின் அடிப்படையில் 1815ம் ஆண்டு முதலும், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் 1505ம் ஆண்டுக்கும் முன்னரான வரலாற்றையும் கொண்ட, பழமை மிக்க ஆலயம் இதுவாகும்.
- 1வது கும்பாபிஷேகம் – 1829ம் ஆண்டு
- 2வது கும்பாபிஷேகம் – 1894ம் ஆண்டு
- 3வது கும்பாபிஷேகம் – 1909ம் ஆண்டு
- 4வது கும்பாபிஷேகம் – 1957ம் ஆண்டு
- 5வது கும்பாபிஷேகம் – 1999ம் ஆண்டு
- 6வது கும்பாபிஷேகம் – 2022ம் ஆண்டு என நீண்ட வரலாற்றை கொண்ட ஆலயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US