நீதிபதி இளஞ்செழியனிடம் கையும் களவுமாக சிக்கிய சட்டத்தரணி

Sri Lanka Supreme Court of Sri Lanka Ilanseleyan
By Independent Writer Jul 01, 2022 11:32 AM GMT
Report

திருகோணமலையில் காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் பெயரில் மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதி தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.

திருகோணமலையில் காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் பெயரில் மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதி தொடர்பில் சட்டத்தரணி உட்பட இரு நபர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு மற்றும் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும்,மோசடியாக எழுதிய உறுதிக்கு உறுதுணையாக செயற்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,பிரதம நீதியரசரால் விசேடமாக திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கேம்ரீஜ் வீதியில் உள்ள ராணி சட்டத்தரணியான ஜோஜ் சிட்டி என்பவருக்கு சொந்தமான உரித்தும்,உடமையும் கொண்ட திருகோணமலை,நிலாவெளி கும்பிறுபிட்டி பகுதியில் உள்ள 7 ஏக்கர் காணிக்கு இந்த மோசடி உறுதி எழுதப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனிடம் கையும் களவுமாக சிக்கிய சட்டத்தரணி | Trincomalee Court Judge Ilanchezhiyan S Judgment

இம்மோசடி உறுதி 22.07.1970 ஆண்டு காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணியால் எழுதப்பட்டதாகவும், 48 வருடங்கள் காலம் தாழ்ந்து 13.12.2018 ஆம் ஆண்டு திருகோணமலை காணி பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 22.07.1970 ஆம் ஆண்டு அதே இலக்க உறுதியொன்று நுவரெலியா ஆதனம் ஒன்றிற்கு காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணியால் எழுதப்பட்டமையும் நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோசடி உறுதியின் அடிப்படையில், திருகோணமலையில் தற்சமயம் கடமையாற்றும் சட்டத்தரணியால் 19.11.2018 ஆம் ஆண்டு ஒருவருக்கு காணி உரிமை மாற்றப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 10 நாட்களின் பின்னர் 29.11.2018 ஆம் ஆண்டு குறித்த சட்டத்தரணிக்கு காணியில் ஒரு பங்கு உரித்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் 22.07.1970 எழுதப்பட்டதாக கூறப்படும் உறுதி மோசடியான காணி உறுதி எனவும்,70 ஆம் ஆண்டு Attornery-at-law என அழைப்பதில்லை Advocate (அப்புக்காத்து) எனவே அழைப்பர்.Attorney -At-Law சட்டம் 1976 இன் பின்னர் இப்பதவி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

எனவே இது மோசடியாகும். அதேசமயம், 1970 ஆம் ஆண்டின் உறுதியில் காலம் சென்ற சட்டத்தரணி ஜனநாயக சோசலிச சிறிலங்கா குடியரசு என குறிப்பிட்டு அத்தாட்சிப்படுத்தியுள்ளதாக மோசடி உறுதியில் காணப்படுகின்றது.

1970 ஆம் ஆண்டு இலங்கை தீவுகள் என அழைக்கப்பட்டது. (ISLANDS OF CEYLON) 1970 ஆம் ஆண்டு இலங்கை சிறிலங்கா குடியரவு என அழைக்கப்படவில்லை.

நீதிபதி இளஞ்செழியனிடம் கையும் களவுமாக சிக்கிய சட்டத்தரணி | Trincomalee Court Judge Ilanchezhiyan S Judgment

இலங்கை சிறிலங்கா குடியரசு என 1972 ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டது. எனவே 1970 ஆம் ஆண்டு மோசடி உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா குடியரசு என குறிப்பிட்டுள்ளமை இரண்டாவது மோசடியாகும்.

1970 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாக கூறும் மோசடி உறுதியை 48 ஆண்டுகளின் பின் 2018 ஆம் ஆண்டு காணி பதிவகத்தில் பதிவு செய்தமை மூன்றாவது மோசடியாகும்.

எனவே மோசடி உறுதி மூலம் ராணி சட்டத்தரணி ஜோஜ் சிட்டியின் காணியில் இருந்து மோசடியாக காணியை எழுதியவர்கள், அத்துமீறி இருப்பவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மோசடி உறுதிக்கு உறுதுணையாகவிருந்து காணி துண்டையும், பெற்றுக்கொண்ட சட்டத்தரணிக்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் விசேடமாக குறிப்பிட்டுள்ளார்.     


மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US