தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
திருகோணமலை, சீதனவெளிப் பகுதியில் ரிப்பர் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (13-06-2024) பகல் இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சம்பூர்- சீதனவெளி பகுதியைச் சேர்ந்த 18 வயதான வி.விதுஷன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சடலம் மூதூர் தள வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கால்நடைகள் பராமரிப்பவர் என தெரிய வருகிறது.
ரிப்பர் வாகனத்தை செலுத்துவந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.