கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் வழமைக்கு
கரையோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைபோன்று இடம்பெறுவதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அண்மையில் சமிக்ஞை கோளாறு காரணமாக ஒரே மார்க்கத்தில் இரு தொடருந்துகள் பயணித்து விபத்து ஏற்படவிருந்தமை தெரியவந்துள்ளது.
சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு நிவர்த்திக்கப்படும் வரையில் பாணந்துறை மற்றும் மொரட்டுவைக்கு இடையில் ஒரு தண்டவாளத்தில் மாத்திரமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கரையோர மார்க்கத்தில் சமிக்ஞை கட்டமைப்பு முறையாக இயங்குவதாக அதற்குப் பொறுப்பான தரப்பினர் தமக்கு உறுதியளித்துள்ளதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.