விபரீத முடிவால் பலியான குடும்பஸ்தர் ; தமிழர் பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் கறுத்த பாலத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
இறந்தவர் செங்கலடி பதுளை வீதியில் இலுப்படிச்சேனை கன்னித்தீவு வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடையவர் என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
சடலத்திற்கு அருகில் மதுபான போத்தல் மற்றும் கிருமிநாசினி குப்பி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் முதற்கட்ட விசாரணைகளை அடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.