இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற துயரம்; 6 மாணவர்கள் பலி
திருகோணமலை - கிண்ணியா, குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகில் பயணித்த மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு இன்று (23) காலை விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
குறிஞ்சாங்கேனி பிரதேசத்தில் பால நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதால் அவ்விடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
அத்துடன் மேலும் சிலர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந் தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த விபத்தில் பலர் மரணித்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படும் நிலையில் தொடர்ந்தும் அங்கு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரியவந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் 6 மாணவர்கள் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்பொழுது பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட 6 பேர் பலியானதாக கூறப்படுகின்றது.
அத்துடன் துடன் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேஎளை படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


