சாரதியின் தூக்க கலகத்தால் ஏற்பட்ட விபரீதம்
கொழும்பு கோட்டை - இலங்கை வங்கி மாவத்தையின் உலக வர்த்தக மையத்தின் முன்னால் இன்று இடம்பெற்ற விபத்தில் 7 உந்துருளிகளும் மகிழுந்து ஒன்றும் சேதமடைந்துள்ளன.
குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோட்டை பகுதியிலிருந்து பிரவேசித்த மகிழுந்தின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதையடுத்து, இலங்கை வங்கி மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது அவரின் மகிழுந்து மோதுண்டுள்ளது.
இந்தநிலையில், உந்துருளியில் இருந்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.