யாழில் முதியவருக்கு நேர்ந்த சோகம்
யாழ்ப்பாணம் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் (1) செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபர் ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் தனிமையில் தங்கியிருந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில் வழமையான அவருடைய நடமாட்டம் இல்லாத நிலையில், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது முதியவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.