பொதுமகனை பலியெடுத்த கிணறு : பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
கிணறுகள் போன்ற இருண்ட மூடப்பட்ட இடங்களில், குறிப்பாக நீண்ட காலமாக சூரிய ஒளி படாத தேங்கி நிற்கும் சேற்று நீரைக் கொண்ட இடங்களில் மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகளின் சரியான ஆய்வு அல்லது பாதுகாப்பு நெறிமுறைகளைப் பயன்படுத்தாமல் அத்தகைய பகுதிகளுக்குள் செல்வது ஆபத்தானது என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மூடி வைக்கப்பட்டிருந்த கிணறு
பலாங்மூடி வைக்கப்பட்டிருந்த கிணற்கொடை, முல்கமாவில் வசிக்கும் 39 வயதான பொதுமகன் ஒருவர், மயக்கமடைந்து நீண்ட காலமாக மூடி வைக்கப்பட்டிருந்த கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்தோட்டை - கல்தம்யாய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று இரண்டு நண்பர்களுடன் வந்த குறித்த நபர், வீட்டிற்கு அருகில் நீண்ட காலமாக மூடி வைக்கப்பட்டிருந்த கிணற்றை மீண்டும் புனரமைக்கும் நோக்கத்துடன் சுத்தம் செய்யத் தொடங்கினார்.
தண்ணீரை அகற்றிய பிறகு, குறித்த நபர் அடியில் உள்ள சேற்றை அகற்ற கிணற்றுக்குள் நுழைந்தபோது சுயநினைவை இழந்து வீழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.