ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 608 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 896,884 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
2025 ஏப்ரல் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 38,744 ஆகும்.
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,348 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 13,525 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 11,654 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 10,744 சுற்றுலாப் பயணிகளும்,
சீனாவிலிருந்து 8,667 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 8,276 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.