டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (08) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 49 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 318 ரூபாய் 58 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபாய் 39 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 403 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.20 ரூபாயிலிருந்து 307.69 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 317.90 ரூபாயிலிருந்து 318.41 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.12 ரூபாயிலிருந்து 307.99 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 318 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 308 ரூபாய் மற்றும் 317 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.