பஸிலிடமிருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டும்; விமல் கூப்பாடு
பஸில் ராஜபக்ச அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் ஒருபோதும் தான் அமரப்போவதில்லை. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
” அமைச்சு பதவி நீக்கப்பட்டதால் கவலை இல்லை. மக்களுக்கு வழங்கிய ஆணையே முக்கியம் என தெரிவித்த விமல் வீரவங்ச, இந்த நாட்டை தற்போதைய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவே நெருக்கடிக்குள் தள்ளியதாகவும் குற்றம் சுமத்தினார்.
நாட்டை ஆள்வது ஜனாதிபதியோ பிரதமரோ அல்ல என தெரிவித்த அவர், பஸில்தான் என்றும், அசிங்கமான அந்த அமெரிக்கருக்கு எமது நாட்டு தலைவிதியை நிர்ணயிக்க இடமளிக்க முடியாது என தெரிவித்ததுடன் , அவரிடமிருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்றும் விமல் கூறினார்.