பிள்ளையானின் தலைமையகத்தில் கதிரைக்கு வந்த சோதனை
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று (01.06.2025) நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் நாகலிங்கம் திரவியம் தலைமையில் நடைபெற்ற இச் சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
தசதரன் மற்றும் ஜெயலலிதாவின் பின் மறு அவதாரம் எடுக்கும் பிள்ளையான் ராமாயணத்தில் ராமர் வணம் செல்ல தசதரன் அவர் திரும்பும்வரை ராமரின் செருப்பை கதிரையில் வைத்து தான் ஏறாமல் ஆட்சி செய்தான்.
தமிழ் நாட்டில் ஜெயலலிதா அம்மையார் சிறை சென்றவுடன் பதில் முதல்வர் அம்மையாரின் கதிரையை எடுக்காமல் வரும்வரை பொறுப்போடு இருந்து ஆட்சி நடந்தது.
அதன் பின்னர் உலகில் நடந்த அதிசயம் TMVP கட்சியிலாம் அதே போன்ற ஒரு விசுவாசமாம்... ஆதரவாளர்கள் பதிவு





