யாழில் பொலிஸ் அதிகாரி உட்பட மூவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர்!
யாழ் பண்ணைப் பகுதியில் வைத்து மாடுகளை கடத்திக்கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து இன்று (04-04-2024) அதிகாலை 03 மணியளவில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனம் ஒன்றில் யாழ் நோக்கி 08 மாடுகளைக் திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது, மாடுகளை கடத்தி சென்ற மூவர் யாழ்.பண்ணைப் பகுதியில் வைத்து யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும், மீட்கப்பட்ட மாடுகளுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.