திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் பக்தர்கள் பேரதிர்ச்சி; ஆண்டவனே இது என்ன சோதனை!
இலங்கையின் வரலாற்று பிரசித்திபெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயயத்தின் பல நூறு கோடி மதிப்புள்ள தாலி பட்டப்பகலின் திருடுபோயுள்ளமை பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல நூறு வருட காலமாக சோழர் காலம் தொடக்கம் கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த தாலி போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்தது.
சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா?
இந்த நிலையில், கடந்த வாரம் இந்த தாலி பகலில் திருடு போய் உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாலி திருடப்பட்டமை தொடர்பில் பக்தர்கள் கேள்வி எழுப்ப, கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.
இந்நிலையில் பல நூறு கோடி பெறுமதியான இரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரண் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்தனர்.
அதோடு அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டுபோய் சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா? இல்லையெனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி விற்பனை செய்வதற்காகவா? என பொது மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.
அதேவேளை இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் இதுவரை பொலிஸில் முறைப்பாடு கூட செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆளுநர் விடுத்த பணிப்புரை
அதேபோல் கடந்த காலத்தில் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுண் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் திருட்டு போய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விடயம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்த பொதுமக்கள் ஆளுநர் கவனத்திற்கும் சம்பவத்தை கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஆளுநர் தொண்டமான் தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.