இலங்கை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தேவாரம் !(Video)
இலங்கை நாடாளுமன்றத்தில் "நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி'' என்னும் திருக்கோணேஸ்வரர் ஆலய தேவாரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எம்.பியால் உரத்துப் பாடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சிறிதரனால் கோணேச்சரர் ஆலாய தேவாரம் உரத்துப் பாடப்பட்டதுடன் ஆலயத்தின் வரலாறும் எடுத்துரைக்கப்பட்டது.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அதேவேளை சிறிதரன் எம்.பி தனது உரையினை ஆரம்பிக்க முன்னர், ''தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஓதிய பின்னரே அவர் தனது உஅரையினை நாடாளுமன்றில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.