SPB மகனுக்கு நடிகையுடன் மூன்றாம் திருமணமா! வைரலாகும் தகவல்
எஸ் பி பியின் மகனும் நடிகர் மற்றும் பாடகருமான எஸ் பி சரணுக்கு பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவியுடன் விரைவில் மூன்றாம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பியின் மகன் சரண் தமிழில் சென்னை 28, சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ் பி சரண் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
எஸ் பி சரண் ஏற்கனவே இரண்டு விவாகரத்து பெற்றவர் . இவருக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு பிஜோய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்கள் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருகின்றனர். முதல் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் அவரையும் பிரிந்துவிட்டார். இந்த நிலையில் சரணுக்கு மூன்றாம் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் தனுக்ஷின் அண்ணா செல்வராகவனின் முன்னாள் மனைவியயும் நடிகையுமான சோனியா அகர்வாலை தான் sp சரண் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என கூறப்படுகின்றது.
அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் சரண், சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி அதில் ‘ஒரு புதிய விஷயம் தயாராகிக்கொண்டு இருக்கிறது’ என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சோனியா அகர்வால் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்ட சில காலங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.