கொழும்பை விட்டு துரத்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ ; பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ள இரு நாடுகள்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புல்லட் ப்ரூவ் எனப்படும் குண்டுகள் துளைக்காத வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுள்ள நிலையில், அப்படியான வாகனங்களை மஹிந்தவுக்கு வழங்க முடியுமென இரு நாடுகள் மஹிந்தவிடம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தியா அல்லது நன்கொடையாக வழங்கும் அடிப்படையிலா இந்த உதவி வழங்கப்படவுள்ளதென்பது பற்றி இன்னும் தெரிய வரவில்லை.
மஹிந்தவிடம் முன்வைத்த கோரிக்கை
சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளின் தூதுவர்கள் இது தொடர்பில் மஹிந்தவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு மஹிந்த தரப்பிலிருந்து இதுவரை பதில் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
அதேவேளை வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்நாட்டு விடயங்களில் இவ்வாறான தலையீடுகளை செய்வது தொடர்பில் அரசும் கவனம் செலுத்துமென மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
அனுர அரசாங்கத்தின் அதிரடியால் கொழும்பில் இருந்து தங்காலைக்கு குடிபெயர்ந்த மகிந்த ராஜபக்ச , கடந்த வாரம் தனது பாதுகாப்பு வாகங்களையும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.