பேருந்து கட்டணத்தில் திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்போது டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதற்கமைய பஸ் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கடந்த இருமுறை எரிபொருள் விலையேற்றத்திலும் பஸ் கட்டண திருத்தம் செய்யப்படாததால், வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பேருந்து சங்கங்கள் வலியுறுத்தின.
இந்த நிலையில் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.