பௌத்த சிதைவுகளே உள்ளன! தமிழர்களிடமிருந்து பறிபோகுமா வெடுக்கு நாறிமலை?
நெடுங்கேணி வெடுக்கு நாறிமலையில் உள்ளது பௌத்தவிகாரையின் சிதைவுகளே என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலையில் அண்மைக்காலமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்றுவருவதாகவும், எனினும் முன்னர் பௌத்தவிகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாக அனுரமனதுங்க கூறியுள்ளார்.
அதோடு நெடுங்கேணி வெடுக்குநாறி மலைதொடர்பான விடயம் நீதிமன்றத்தில் இருக்கின்ற பிரச்சினையில் நாம் ஏனைய பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஒலிபெருக்கியினை பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தினை நாம் வழங்கியிருந்தோம் என்றும் இதனால் அதிலும் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டிருப்பதை தங்களால் காணக்கூடியதாக இருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழர்கள் ஆதிகாலம் தொட்டு வெடுக்கு நாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்திவரும் நிலையில், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் கூறியுள்ள இந்த விடயம் , எமது தொன்மையான வெடுக்கு நாறிமலை நம்மிடமிருந்து பறிபோகுமா என்ற அச்சம் தமிழர்களிடத்தில் தோன்றியுள்ளது.