அர்ச்சுனா எம்பியால் அவதியுறும் ஊர் மக்கள்!
யாழ்ப்பாணம் - பெரியவிளான் மக்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியவிளான் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளதுடன்அங்கு ஒரு பாழடைந்த கிணறும் உள்ளது.

பராமரிக்க முடியாத காணிகளை மக்களுக்கு வழங்கலாமே...
அர்ச்சுனா எம்பியின், பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன.
மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர், தான் பல நல்ல விடயங்களை செய்வதாக வாயால் மட்டுமே கூறிக்கொண்டு இருப்பவர் தனது காணி குறித்து அக்கறை இல்லாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.
காணியை சுத்தம் செய்யா விட்டால், பிரதேச சபையினால் அர்ச்சுனாவின் காணியானது சுத்தம் செய்யப்பட்டு பிரதேச சபைக்கு உரியதாக மாற்றவேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். பெரியவிளானில் காணிகள், வீடுகள் இன்றி பல குடும்பங்கள் வாழ்கின்றன.
அவர் ஒரு நல்ல நோக்கம் உள்ளவர் என்றால், தன்னால் பராமரிக்க முடியாத காணிகளை அந்த மக்களுக்கு வழங்கலாமே? எனவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
ஆனால் அவர் பிறந்த ஊரான பெரியவிளான் பகுதியில் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் இருக்கின்றனர். செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் அவரால் செய்ய முடியாது ஆனால் வாயால் வெட்டி பேச்சு பேச முடியும் என்றும் பெரியவிளான் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.