வாயில்லா ஜீவன்களை கொன்ற வாகனம்
Batticaloa
Trincomalee
Accident
By Sulokshi
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கெப் வாகனத்துடன் மோதுண்டு இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாடு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (07) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி கெப் ரக வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது , மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பட்டித்திடல் பகுதியில் வீதியை குறுக்காக கடக்க முற்பட்ட மாடுகளே வாகனத்துடன் மோதுண்டுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மூதூர் போக்குவரத்து பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் வாகனம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US