இளம் குடும்பஸ்தரை மோதித்தள்ளிய புகையிரதம்
திருகோணமலை, தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முள்ளிப்பொத்தானையை சேர்ந்த 21 வயதுடைய இளம் குடும்பஸ்தரான ஹமீட் முபீட் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயில் மோதி பலியாகியுள்ளார். காதில் ஹெட்செட் அணிந்த நிலையில், கையடக்கத் தொலைபேசியுடன் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம், கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்த தம்பலகாமம் பொலிஸார் ,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.