முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசத்தின் சிறப்பும்.... விரதம் இருப்பதால் பெறும் நன்மைகளும்...!
தைப்பூச நாளில் தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்ற துவங்கியதாக புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன.
தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
பால் குடங்கள், பல விதமான காவடி, தேரோட்டம் ஆகியன நடத்தப்படுவது வழக்கம்.
தைப்பூசத்தின் சிறப்பு
தைப்பூச நாளில் தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் தெய்தார்.
பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி, கையில் வேல் தாங்கி முருகன் நின்ற தினம் இன்று தான்.
அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழை கற்பித்ததும் இந்த நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன.
அதுமட்டுமல்லாது சிதம்பரம் நடராஜர், ஆனந்த தாண்டவம் ஆடி பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு காட்சி கொடுத்த நாளும் தைப்பூச தினம் தான்.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணையும் நாளை தைப்பூசம் என்கிறோம். அந்தவகையில் 2023 ம் ஆண்டு பிப்ரவரி 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 05
பிப்ரவரி 04 ம் தேதி இரவு 10.41 மணி துவங்கி பிப்ரவரி 06 ம் தேதி அதிகாலை 12.48 வரை பெளர்ணமி திதி உள்ளது. இதே போல் பிப்ரவரி 04 ம் தேதி காலை 10.41 துவங்கி பிப்ரவரி 05 ம் தேதி பகல் 01.14 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது.
பிப்ரவரி 05 ம் தேதியே நாள் முழுவதும் பெளர்ணமி உள்ளதால் அந்த நாளே தைப்பூச நாளாக கருதப்படுகிறது.
என்ன செய்யவேண்டும்?
அதிகாலையில் எழுந்து, நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, முருகன் படத்திற்கு முன் விளக்கேற்ற வேண்டும்.
காலை, பகல் இரு வேளையும் பால், பழம் மட்டுமே அருந்த வேண்டும்.
இருவேளையும் கோவிலுக்கு செல்வது சிறப்பானது.
முடியாதவர்கள் மாலையில் மட்டுமாவது கோவிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும்.
தைப்பூசத்தன்று முருகன், சிவன், குரு பகவான் ஆகியோரை வழிபடலாம்.
முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பால் பாயசம் இவற்றில் ஏதாவது ஒன்றை படைத்து வழிபடலாம்.
தைப்பூசத்தன்று வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும்.
தைப்பூசத்தன்று நாள் முழுவதும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தர் கலி வெண்பா ஆகிய பாடல்களை பாராயணம் செய்யலாம்.
முடியாதவர்கள் "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம்.
தைப்பூச விரதமிருப்பதால் கிடைக்கும் பயன்
தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் முருகன் அருளால் நிறைவேறும்.
செல்வம் பெருகும், கணவன்- மனைவி ஒற்றுமை சிறக்கும், தொட்ட காரியம் அனைத்தும் பூரணமாக நிறைவேறும்.