கொழும்பில் நீண்ட நாட்களாக சிக்காமல் இருந்த திருடர்களை பிடித்து கட்டி வைத்த பொதுமக்கள்!
தெகிவளை கரகம்பிட்டி பகுதியில் கடைகளில் திருடுவதில் ஈடுபட்ட இரு திருடர்களை பிடித்த அப்பகுதி மக்கள் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் தாங்களே தண்டனை வழங்கியுள்ளனர்.
திருடர்கள் இருவரை பிடித்த பொதுமக்கள் அவர்களை எஸ்டிஜெயசிங்க விளையாட்டு மைதானத்தின் முன் கேட்டில் கட்டி வைத்துள்ளனர். அத்துடன் இவர்கள் தெகிவளை திருடர்கள் என எழுதி தொங்கவிட்டுள்ளனர்.
சமூகஊடகங்களில் இந்த படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு சில வாரங்களாக தனது வீட்டில் பல முறை திருட்டுபோயுள்ளது என தெரிவித்துள்ள அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பொலிஸார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நாங்கள் பொலிஸாரை அழைத்தவேளை அவர்கள் வரவேயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறிப்பிட்ட கடையிலிருந்து எந்த பொருளும் திருடப்படவில்லை என்பதை அறிந்த அந்த பகுதி மக்கள் தாங்கள் பிடித்துவைத்திருந்தவர்களை விடுவித்துள்ளனர் என தெரிவித்துள்ள கரகம்பிட்டிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பொலிஸாருக்கு தெரிவிக்காமல் பொதுமக்களை விடுவித்தது தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.