மீண்டும் உயர்ந்தது பாணின் விலை....அதிர்ச்சியில் மக்கள்
நாட்டில் இன்றிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி 450 கிராம் பாணின் விலையானது 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டத்தின் போது கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.