இலங்கையர்களை ஏக்கம்கொள்ளவைத்த தங்க விலை!
சர்வதேச பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் ஒரு பவுண்ட் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 682,998 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றையதினம் 192,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றையதினம் 176,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை படிப்படியாக குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரித்து வருகின்றது.