நாடாளுமனற்ற உறுப்பினர் கண்ணீர் விட்டு அழுகை
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உரையாடல்
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ரோஹித அபேகுணவர்தன மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவமாகும்.
அன்றை தினம் எனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதலின் போது அதிஷ்டவசமாக எனது தாயார் உயர் தப்பினர்.
இன்று அவர் இங்கு வந்திருக்கின்றார் என கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
தற்போது கிடைத்துள்ள வாழ்க்கை ஒரு போனஸாகும்.
அதனை கொண்டு மீண்டும் பொதுஜன பெரமுனவின் ஆட்சி பலமாக எழுச்சி பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.