கணவன் இறந்த நிலையில் மகனை வீட்டைவிட்டு அடித்து விரட்டிய தாய்: யாழில் இடம்பெற்ற சம்பவம்
கொடிகாமம் பகுதியில் 12 வயது மகனைவீட்டை விட்டு விரட்டிய அடித்த தாய் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாயின் கணவர் இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் இருக்க வேண்டாம் என கூறி 12 வயது சிறுவன் அடித்து விரட்டப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் இரவு முழுவதும் வீதியில் நின்று உள்ளார்.
இதனையடுத்து இன்று காலை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. கொடிகாமம் பொலிசார் இன்று மதியம் தாயை கைது செய்ததுடன் மகனையும் பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.
கடந்த 7ம் திகதி தாய் காயப்படுத்தியதால் குழந்தை ஐந்து நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இதேவேளை, சந்தேகநபர் நாளை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.