வரிசையில் காத்திருந்த அமைச்சரின் மனைவி; இலங்கையில் இப்படியும் ஒரு பெண்மணி!
துறைமுக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவின் மனைவி கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மத்தியில் வரிசையில் காத்திருக்கின்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது.
ஜயந்த சமரவீரவின் மனைவி கொழும்பு – மாளிகாவத்தை சிறிசேன விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள தடுப்பூசி நிலையத்தில் காத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதேவேளை அவர் சதொச நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்றும் தினமும் பொதுமக்களுடன் இணைந்தே ரயிலில் பயணம் செய்கின்றார் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவரின் இந்த செயல் பலரையும் வியக்கவைத்துள்ளது.