நபர் ஒருவர் கொலை; பொலிஸார் திடுக்கிடும் தகவல்!
தனிப்பட்ட விரோத காரணமாக நபரொருவரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தால் வெட்டி, பலத்த காயங்களுக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மஹங்கொட பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கலகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே உயிரிழந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பயன்படுத்தி இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.