மருத்துவ கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த காதலன்!

India
By Sundaresan Dec 07, 2022 04:13 AM GMT
Sundaresan

Sundaresan

Report

ஆந்திராவில் மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தபஸ்வி (வயது 21). விஜயவாடாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்தார்.

பெற்றோர் மும்பையில் வசிப்பதால் விஜயவாடாவில் உறவினர் ஒருவரது வீட்டி்ல் தங்கி படித்து வந்தார். இவருக்கும், கிருஷ்ணா மாவட்டம் மணிகொண்டா பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஞானேஸ்வர் (25) என்பவருக்கும் இடையே சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

தினமும் இருவரும் நட்பாக சமூகவலைத்தளம் மூலமாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அது காதலானது. இருவரும் சில மாதங்கள் காதலித்து வந்தனர். இதற்கிடையே திடீரென காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

ஆனாலும் காதலர் ஞானேஸ்வர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அவரது தொல்லை தாங்க முடியாத தபஸ்வி இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஞானேஸ்வரை அழைத்து பேசிய பொலிசார், இனிமேல் மாணவியின் வாழ்க்கையில் தலையிட கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.

காதலர் தொல்லை காரணமாக விஜயவாடாவில் இருந்து வெளியேறி குண்டூர் மாவட்டம் தக்கெல்லபாடு கிராமத்தில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கி மாணவி தபஸ்வி படித்து வந்தார்.

காதலர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை தீர்த்து வைக்க அந்த தோழி முடிவு செய்தார். எனவே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காதலர் ஞானேஸ்வரை தோழி தனது வீட்டிற்கு அழைத்தார்.

மருத்துவ கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த காதலன்! | The Lover Who Cut Neck Medical College Student

அங்கு நேற்று முன்தினம் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவி தபஸ்வி, தான் வேறொருவரை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் மறைத்து கொண்டு வந்த அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் பிளேடால் மாணவியின் உடல் முழுவதும் வெட்டினார்.

மேலும் ஆட்டை அறுப்பதை போல தபஸ்வியின் கழுத்தை அறுத்தார். இதனை தோழி தடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. உடனே தபஸ்வி மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்ததும் தோழி அலறினார். அதற்குள் ஞானேஸ்வர் தனது கைகளை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள், ஞானேஸ்வரை பிடித்து கட்டி வைத்தனர். மேலும் மாணவி தபஸ்வியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், காதலர் ஞானேஸ்வரை கைது செய்தனர்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US