முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் முல்லைத்தீவு- கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் அழைத்துச் செல்லப்பட்டார்.
23 வயது இளைஞன் கைது - சிறுமி மருத்துவமனையில்
அப்போது வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் மறைத்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அவதானித்த வீதியால் சென்ற மக்கள் சத்தமிட்ட போது இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளார்கள். சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்துக்கொண்ட சிறுமியின் தகவலின் படி அப்பகுதியை சேர்ந்த இளைஞன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சத்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 23 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமியினையும் அவரது தாயாரினையும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்ற நிலையில் வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய சிறுமி மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.