எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட பரபரப்பு!
இன்று பிற்பகல் பண்டத்தரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மேல்மாகாண பதிவில் உள்ள CBA – 8144 இலக்கமுடைய, வைத்தியர்களின் குறியீடு பொறிக்கப்பட்ட காரில் வந்த இருவர் தம்மை வரிசையில் முன்னுக்கு விடுமாறு அங்கு நின்ற கார் சாரதி சிலரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுகாதாரத்துறையினருக்கு அத்தியாவசிய சேவை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுகின்ற போதும் எவ்வாறு இந்தக் கார் பொதுமக்களின் வரிசையில் வந்து அவர்களின் எரிபொருளையும் சுரண்டமுடியும் என மக்கள் குழப்பமடைந்தனர்.
ஆனாலும் அவர்களை பார்க்கும்போது சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்கள் போல் தெரியவில்லை.
காதில் தோடு அணிந்து, தாடி வளர்த்து, வாயில் வெற்றிலை போட்டு குதப்பி வீதி முழுவதும் துப்பியபடியே திரிந்ததை அவதானிக்க முடிந்தது.
இதன்படி குறித்த கார் சுகாதாரத் துறை ஊழியர் (வைத்தியர்) ஒருவருடையதாக இருக்கலாம். இவர்களது செயற்பாடுகள் அங்கிருந்தவர்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.