ரணிலை ஆதரிக்கும் எம்.பியை தாக்கிய சாரதி; ஹோட்டலில் அடிதடி!
ரணிலை ஆதரிக்கும் மொட்டு எம்.பியை சாரதி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகின்றது. பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவம் தொடர்பில் இன்று நாடா ளுமன்றத்தில் கூடியிருந்த உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
ஓட்டுனரின் அடியால் தரையில் விழுந்த எம்.பி.
நள்ளிரவு நெருங்கும் போது, மற்றொரு எம்.பி.யின் ஓட்டுநர், ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இரண்டு எம்.பி.க்களிடம், தனக்கு சாப்பாடு, பானங்கள் கூட கிடைக்கவில்லை என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது உள்ளூர் எம்.பி. ஒருவர் டிரைவரை தாக்க சென்றதுடன், ஓட்டுனரின் அடியால் சம்பந்தப்பட்ட எம்.பி. தரையில் விழுந்துள்ளார்.
குறித்த இடத்திற்கு வந்த கைத்துப்பாக்கிக்கு பிரபலமான எம்.பி வழமை போன்று கைத்துப்பாக்கியை எடுத்த போது அதுவும் தரையில் விழுந்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மற்றுமொரு எம்.பியுடன் சாரதியுடன் சண்டைக்கு போன போது கண்டி எம்.பி. தலையிட்டு சம்பவத்தைக் கட்டுப்படுத்தியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.