நாடு அராஜக நிலை நோக்கி நகர்கிறது ; சுதந்திரக்கட்சி சாடல்
நாடு அராஜக நிலை நோக்கி நகர்வதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதனை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
” மக்களின் பிரச்சினைகள் அவர்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் மலினப்படுத்தும் காரணத்தினால் இந்த நிலை உருவாகியுள்ளது. இலங்கை தற்பொழுது அராஜக நாடாக மாற்றமடைந்துள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களும் ஏனைய கட்சிகளும் மக்களை புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் சாடினார்.
இந்த நிலையில் அரசுமீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டதாகவும்,
அரச பிரதிநிதிகள் உணர்வுபூர்மாக அறிக்கைகளை வெளியிடுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.