பிரிட்டன் ராணியின் இறுதிசடங்கிற்கு இவ்வளவு செலவா! பிரமிப்பை ஏற்படுத்திய தகவல்
மறைந்த பிரிட்டன் அரசியார் எலிசபெத்தின் (Queen Elizabeth II) இறுதி சடங்குக்காக மட்டும் சுமார் 6 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்கப்படுகிறது.
அதவாது இந்திய ரூபாய் மதிப்பில் 55 ஆயிரம் கோடி ருபாய் என்று கணக்கிடப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
70 ஆண்டுகாலம் ராணி
பிரிட்டன் மகாராணி (Queen Elizabeth II) ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் (Queen Elizabeth II) தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் பிரிட்டன் அரசியாரின் மறைவால் நிர்வாக ரீதியான சில மாற்றங்களும் பிரிட்டனில் நடைபெற உள்ளது. 1952 ஆண்டு பதவி ஏற்றது முதல் ராணி எலிசபெத் (Queen Elizabeth II) பல்வேறு காரணங்களுகாக புகழ்பெற்றவராக விளங்குகிறார்.
அவர் பெயரும் உலகம் முழுவதும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. தற்பொழுது உள்ள பிரிட்டன் நாட்டு பணத்தாள்களில் ராணி எலிசபெத்தின் (Queen Elizabeth II) படங்கள் இடம் பெற்றுள்ளன.
நிர்வாக ரீதியான மாற்றங்கள்
இந்த பணத்தாள்கள் படிப்படியாக மாற்றப்பட்டு அதில் புதிதாக பதவி ஏற்றுள்ள பிரிட்டன் மன்னர் சார்லஸ் (King Charles III) படம் இடம் பெற உள்ளது. இதற்காக 10 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் என எதிர்பார்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடி என்கின்றனர்.
ஆனால் இது முழுமையாக மாற்றம் பெற்ற பல ஆண்டுகள் ஆகலாம் என்று ம் அதே போல் பிரிட்டன் பாஸ்போர்ட்டிலும் அவரது பெயருக்கு பதிலாக புதிய மன்னர் சார்லஸ் (King Charles III) பெயர் இடம் பெறும் என்கின்றனர்.
இந்நிலையில் குறித்த மாற்றங்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவதானிகள் கூறுகின்றனர்.