லண்டன் கால்வாயில் பிறந்த குழந்தையின் சடலம் ! ஈழத் தமிழரின் நெகிழ்ச்சியான செயல்
பிரித்தானியாவில் வடமேற்கு லண்டனில் உள்ள கிராண்ட் யூனியன் கால்வாயில் பிறந்த குழந்தையின் சடலம் மிதந்துள்ளது.
லண்டன் அருகில் Willesden மற்றும் Park Royal இடையில் உள்ள கால்வாய் நீரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் பிறந்த குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதை கண்ட தமிழர் ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலில் பெயரில் பொலிஸார் மட்டும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.