இலங்கை தமிழ் இளைஞனின் மோசமான செயல்; பொலிஸார் எடுத்த நடவடிக்கை!
தமிழகத்தில் சிறுமியொருவரை கடத்திச் சென்று நண்பர் வீட்டில் அடைத்து வைத்து தகாத முறையில் நடந்துகொண்ட , இலங்கை தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம், கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்று உள்ளது. அந்த முகாமில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் முகாமில் வசித்து வரும் பெண்மணி, கடந்த மார்ச் 4 ஆம் திகதி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,
“எனக்கு 11 ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மகள் வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாகவும், எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தாயார் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் , காணாமல்போன சிறுமி திண்டிவனம் அருகே இருக்கும் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு, மேற்கொண விசாரணையில், கீழ்புத்துப்பட்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசித்து வரும் தினேஸ்வரன் என்ற வாலிபர் சிறுமியை கடத்தியது அம்பலமானது.
சிறுமியை முகாமில் இருந்து கடத்தி சென்ற தினேஸ்வரன், திண்டிவனத்தில் உள்ள நண்பரின் வீட்டில் அடைத்துவைத்துள்ளமை தெரியவந்ததை அடுத்து , தினேஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.