யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த இராணுவம்!
யாழில் இன்றையதினம் முள்ளைவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்ட நிலையில் வீதியால் சென்ற இராணுவத்தினரும் கஞ்சியை வாங்கி குடித்தனர்.
தாயக பகுதி யெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
அந்தவகையில் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இதன்போது, பொது மக்கள் மட்டுமன்றி வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று அருந்தினர்.
அதேவேளை , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் மன்னார்-நானாட்டான் பேருந்து நிலையத்திலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மழைக்கு மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில், மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்று கிளிநொச்சி, உழவனூர் பகுதியில் நிகழ்வு இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பவழங்கப்பட்டிருந்தது.