வவுனியாவில் கடமையில் இருந்த பொலிஸார் ஒருவருக்கு நேர்ந்த கதி
வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிஸார் காயமடைந்துள்ளார்.
நேற்றையதினம் இரவு ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பொலிஸாருடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் போக்குவரத்து பொலிஸார் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.