தீவிரவாதிகள் தாக்குதல் ; ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை அடுத்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
எனினும், வீரர்கள் உயிரிழப்பு குறித்து இந்திய ராணுவத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை .