தமிழர் பகுதியில் பயங்கரம்; மனநலம் பாதிக்கப்பட்டவர் அரங்கேற்றிய கொடூரம்
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் தாயும், சகோதரனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான தாயும், சகோதரனும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தாயார் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மனநலம் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன். நீதிமன்ற அனுமதியுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும்மேலும் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.