யாழில் போராட்ட இடத்திற்கு சென்ற டக்ளஸ் தேவானந்தாவால் பதற்றம்!
யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்று மீனவர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றதனால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சரிடம் , இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் கோரிகை முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும் தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தை தர முடியும் என கூறிய நிலையில் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வெளியேறிய நிலையில் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
தமிழக மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ் மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதுடன் உயிரிழப்புக்களையும் சந்தித்துவருகின்றனர்.
கடந்த வாரமும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையால் யாழை சேர்ந்த இரு மீனவர்கள் உயிரிழந்த நிலையில், தமக்கான தீர்வை எழுத்துமூலமாக தருமாரு கோரி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



